சனியின் பார்வையால் நெற்றியில் விழும் கோடுகள்! அழகான கண்கள் யாருக்கு தெரியுமா?

ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரன் நன்றாக இருக்கிறாரென்றால், அவர்களது கண்கள் காந்தமாகவும், கனிவானதாகவும் இருக்கும். அந்த மாதிரி முக அமைப்பும் வடிவமும் கொண்டவர்களைப் பார்த்தாலே கூப்பிட்டு பேசத்தோன்றும்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் கலாரசனை என்கின்ற அற்புத உணர்வு அளிப்பவர், காதல் கொண்டு சுகமடையும் தகுதி, சிற்றின்பம், திருமணம் முதலான நன்மைகளை ஆணுக்கு அளிப்பவர். பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், அழகான கணவனையும் சுக போகங்களில் திளைக்கும் ஆற்றலையும் வழங்குவார்.

சமுத்திரிகா லட்சணம்
அங்க லட்சணங்கள் ஒவ்வொரு நட்சத்திர ராசிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அதுபோலத்தான் இருப்பார்கள்.

லக்னாதிபதி, உதாரணத்திற்கு மேஷ லக்னம் என்றால் உயரம், குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் உயரத்திற்கு ஏற்ற சதைப்பிடிப்புடன் இருப்பார்கள்.

ரிஷப ராசிக்காரர்கள் என்றால் சராசரி உயரமாகவும் அதற்கும் மேலாக இருப்பார்கள்.

அழகான மூக்கு
மிதுனம், கன்னி புதனின் வீடுகள். இவர்களுக்கு மூக்கின் நுனி கொஞ்சம் உருண்டையாக இருக்கும்.

குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு மிளகாய் மூக்கு இருக்கும். துலாம், சிம்மம், மகரம் ராசிக்கார்களுக்கு மூக்கு நீளமாக இருக்கும். தனுசு, மீனம் ராசிக்காரர்களுக்கு மடித்த மூக்காக அதாவது பெருமாள் மூக்கு என்று சொல்வார்கள் அந்த மாதிரி இருக்கும்.

சனி, புதன் சஞ்சாரம்
சாமுத்திரிகா லட்சணத்தில் பிரதானம் நாசி, கண்கள், நெற்றி அமைப்பு. நெற்றியில் இருக்கும் கோடுகளையெல்லாம் வைத்துச் சில விஷயங்களைச் சொல்லிவிடலாம். சனி லக்னத்தையோ, ராசியையோ பார்க்கிறதென்றால் கோடுகள் நெற்றியில் வர ஆரம்பித்துவிடும்.

புதன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் மெல்லிய மற்றும் நீளமான விரல்களாக இருக்கும். அவருடைய கையைப் பார்க்கும் போதே, அவர் ஜாதகத்தில் புதன் உச்சமாக இருக்கிறார் என்று சொல்லிவிடலாம்.

சந்திரன், சுக்கிரன்
ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் நன்றாக இருந்தால், அவர் வாழ்வில் நல்ல நிலைக்கு எளிதாக வந்துவிட முடியும். சந்திரன் மனோகாரகன் என்பதால், முடிவெடுக்கும் திறமையை இவரே நிர்ணயிக்கிறார். எண்ணத்தைக் கொடுப்பவன் சந்திரன். மனதில் நல்ல விதைகளை விதைக்கக் கூடியவன் சந்திரன். அதனைச் செயல்படுத்தக் கூடியவன் சுக்கிரன். எண்ணம் நல்லதாக இருந்தால் நல்லவையே கிடைக்கும்.