வடமேற்கு பிரித்தானியாவில் உள்ளூர் மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
புதிய நடவடிக்கைகள் கீழ் மூன்று பகுதிகளில் உள்ள மக்கள் மற்ற வீடுகளில் உள்ளவர்களுடன் இனி பழக முடியாது.
வழக்குகள் அதிகரித்த பின்னர் ஓல்ட்ஹாம் மற்றும் பிளாக்பர்ன் நகரங்களும் பெண்டில் மாவட்டத்தின் சில பகுதிகளும் நள்ளிரவில் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தன.
பணியிடங்கள், குழந்தை பராமரிப்பு வசதிகள், பப்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட வணிகங்கள் திறந்த நிலையில் இருக்கும், ஆனால் உள்ளூர் கவுன்சில்கள் விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்.
இந்த நடவடிக்கைகள் கடந்த மாதம் லெய்செஸ்டரில் அமல்படுத்தியதைப் போல கடுமையானவை அல்ல. பிரித்தானியாவில் முதல் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நகரம் லெய்செஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது, எனினும் சமீபத்தில் அங்கு உள்ளூர் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
இதற்கிடையில், பர்மிங்காம் பிரித்தானியா அரசாங்கத்தின் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் நார்தாம்ப்டனில் தொழில்துறை எஸ்டேட்டில் கிட்டத்தட்ட 300 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மக்கள் தேவைப்படும் இடங்களில் சுயமாக தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.