அவளுடைய கனவு தான் என் லட்சியம்: கர்ப்பிணி மனைவிக்காக கணவர் செய்த நெகிழ்ச்சி செயல்

தன்னுடைய மனைவியின் கனவை நிறைவேற்றுவதற்காக 1200 கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் கணவர் அழைத்து சென்ற சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் தனஞ்ஜெய் குமார். இவருக்கு திருமணமாகி மனைவி ஹெம்ப்ராம் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

மனைவி ஹெம்ப்ராம் ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். தேர்வு எழுத அவருக்கு மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் தேர்வு மையம் அளிக்கப்பட்டது.

ஆனானல் சொந்த ஊரான கன்டா டோலா கிராமத்தில் இருந்து தேர்வு மையம் 1,200 கிலோமீட்டர் தூரம்.

சின்ன வயதிலிருந்நதே ஹெம்ப்ராமுக்கு பள்ளி ஆசிரியையாக வேண்டும் என்ற கனவு. தன்னுடைய லட்சியத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று மனைவி உறுதியாக இருந்தார்.

தனஞ்ஜெய் அவ்வளவாக படிக்க வில்லை. 8ம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். எப்படியாவது மனைவியை ஆசிரியையாக்கிவிட வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார்.

கொரோனா பொது முடக்கத்தால் போக்குவரத்து தடை ஏற்பட்டது. தேர்வுக்கு செல்வது சிரமமாக மாறியதுத. தேர்வு மையத்திற்கு செல்லும் வழியில் 4 மாநில எல்லைப் பகுதிகளை கடக்க வேண்டும். அத்துடன் மோசமானதாக இருக்கும் பல சாலைகளையும் கடந்து கர்ப்பிணியை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

ரெயில், பஸ்கள் இயக்கப்படாததால் வாடகை காரில் செல்ல முயற்சி செய்தார்.. ஆனால் கார் டிரைவர் 30 ஆயிரம் ரூபாய் கேட்டனர். இதனால் தனஞ்ஜெய் வருத்தம் அடைந்தார்.

பின்னர் தன் மனைவியின் லட்சியத்தை நிறைவேற்ற தேர்வு மையத்திற்கு சிரமத்தை பார்க்காமல் தன் மொபட்டில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

அதன்படி மழை, மோசமான சாலையைப் பொருட்படுத்தாமல் தனது கர்ப்பிணி மனைவியை 1,200 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்துள்ளார்.

இது குறித்து தனஞ்ஜெய் பேசியதாவது-

மனைவி கர்ப்பிணியாக உள்ளார். காரில் செல்வதற்கு டிரைவர்கள் ரூ.30 ஆயிரம் கேட்டனர். எங்களிடம் பணம் கிடையாது. நாங்கள் எங்கள் நகையை அடமானம் வைத்து தான் தேர்வு எழுத வந்துள்ளோம். ரூ.10 ஆயிரம் தான் கிடைத்தது. அதில்ல ரூ.5 ஆயிரத்திற்குள் அறை வாடகை, உள்ளிட்ட ஒரு வழி பயண செலவை முடித்துக்கொண்டோம். வரும் 11-ந்தேதி வரை தேர்வு எழுத வேண்டி உள்ளது.

முதலில் என் மனைவி சவாலான இந்த பயணத்திற்கு தயக்கம் தெரிவித்தார். பின்னர் மழையையும், கடுமையான சாலைகளையும் கடந்து வந்துவிட்டோம். கண்டிப்பாக என் மனைவி தேர்ச்சி பெறுவார். அவர் நிச்சயம் ஆசிரியர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

கர்ப்பிணி மனைவியுடன் மொபட்டில் பயணித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த காட்சியை பார்த்து பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. உடனடியாக அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.