சென்னையில் திருமணமான 30 நாட்களுக்குள் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை- திருவேற்காடு சேர்ந்த ஜெயராமனுக்கும் கொடூங்கையூரை சேர்ந்த 21 வயதான ரக்சனாவிற்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ரக்சனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருமணம் ஆன ஒரு மாததிற்குள் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால், இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணை மேற்கொண்டதில், ரக்சனா தற்கொலைக்கு முன் தன்னுடைய தந்தைக்கு வீடியோ ஒன்று அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.
அதில், தந்தையின் விருப்பத்திற்காகவே தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ள ரக்சனா, தனது தந்தை கடைசி வரை தன் விருப்பத்தை கேட்கவில்லை என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என அனைவருக்கும் தெரிந்திருந்தும் தந்தைக்கு மட்டும் அது புரியவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
திருமணத்திற்கு முன்பு ஒருவரை தனக்கு பிடித்திருந்ததாக தெரிவித்துள்ள ரக்சனா அவருடன் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தனது தந்தையையும் குடும்பத்தையும் மிகவும் பிடிக்கும், இருப்பினும் திருமணம் ஆன நாளில் இருந்து தான் மிகவும் வேதனையில் இருந்ததாவும் ரக்சனா பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.