கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 771 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31339 ஆக அதிகரித்துள்ளது.