ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்க என்ன பரிகாரம் செய்யலாம்?

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனிப் பெயர்ச்சியானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி நடக்க உள்ளது. அதே சமயம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2020 டிசம்பர் 27 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

தற்போது தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் சனி பகவான் செல்லவிருக்கிறார். இதனால் மகர ராசிக்கு ஜென்ம சனியும், தனுசு ராசிக்கு பாத சனியும், கும்ப ராசிக்கு விரய சனியும் தொடங்குகிறது. மேலும் கும்ப ராசிக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது.

இவர்கள் என்ன பரிகாரம் செய்தால் ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று இங்கு பார்ப்போம்.

  • சனி பகவான் அனுமனின் பக்தர்களுக்கு மோசமான விளைவுகளைத் தரமாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். எனவே ஏழரை சனி நடப்பவர்கள், தினமும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வதால், பெரிதும் பயனடையக்கூடும்.
  • சனி பகவானின் அருளைப் பெற தினமும் மாலை வேளையில் சனி மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். சனி சாலிசாவை தினமும் பாராயணம் செய்வதன் மூலமும், ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
  • ஏழரை சனியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு நவகிரக பூஜை நடத்த வேண்டும். மேலும் ஏழரை சனி நடக்கும் நபர்கள் சனிக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று, நவகிரகங்களை வணங்கி, செய்த தவறுகளுக்கு மனமார மன்னிப்பு கேட்டு பிராத்தனை செய்தால், சனிபகவான் மகிழ்ச்சியை வழங்குவார்.
  • ஏழரை சனி நடக்கும் நபர்கள், சனிக்கிழமை அன்று சனி பகவானுன்னு எள் எண்ணெய்/கடுகு எண்ணெய் தீபம் போட்டு வந்தால், சனி பகவான் சந்தோஷமடைவார். புராணத்தின் படி, கடுகு எண்ணெய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அனுமன் சனி பகவானின் காயங்கள் மற்றும் வடுக்களைக் குணப்படுத்த கடுகு எண்ணெயை வழங்கினாராம்.
  • ஏழரை சனி நடப்பவர்கள், தினமும் சாப்பிடும் முன் வெள்ளை சாதத்தில் கருப்பு எள்ளைப் போட்டு பிசைந்து, அதை காகத்திற்கு வைத்து வந்தால், முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன், காகம் சனி பகவானின் வாகனம் என்பதால், சனியின் அருளும் கிட்டும்.
  • ஏழரை சனி நடக்கும் நபர்கள், சனிக்கிழமை அன்று இரும்புப் பொருட்களை வாங்கவோ அல்லது எண்ணெய்களான கடுகு அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றையோ வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்ரீ யந்திரம் அல்லது குபேரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குபேர யந்திரத்தை வீட்டின் வடக்கு திசையில் வைப்பதன் மூலம், செல்வத்தின் பாதுகாவலரான குபேரர் செல்வத்தை அதிகரிக்க உதவுவதோடு, வாழ்வில் வெற்றி அடைய உதவுவார். மேலும் இது ஏழரை சனியின் மோசமான விளைவுகளையும் குறைக்க உதவும்.
  • ஏழரை சனி தாக்கத்தை 7 மற்றும் 14 முக ருத்ராட்சையை அணிவதன் மூலம் குறைக்கலாம்.14 முக ருத்ராட்சை சிவபெருமானின் உண்மையான வடிவம் என்று கூறப்படுவதால், சனி பகவானைப் பிரியப்படுத்த இந்த வடிவ ருத்ராட்சையை அணிந்து கொள்ளலாம்.
  • சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டியது அவசியம். அதுவும் காலையில் 6-7 மணியளவில் சனி ஹோரையில் நல்லெண்ணெயைத் தேய்த்துக் குளித்தால், சனியின் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.