உங்கள் பணம் பத்திரம்? இலங்கையை அதிர வைத்த ஏ.டி.எம் திருடர்கள்

இலங்கையில் ஏடிஎம்களில் இருந்து சட்டவிரோதமாக பணம் திருடி வந்த 7 நைஜீரியர்களை குற்றவியல் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

சுமார் 30 பேர் கொண்ட வலுவான கும்பலொன்றை சேர்ந்த சிலரே கைதாகியுள்ளதாக பொலிசார் நம்புகிறார்கள்.

இந்த கும்பலின் உறுப்பினர்கள் ஏ.டி.எம் இயந்திரங்கள் தொடர்பில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் நீண்ட காலமாக ஏடிஎம்களில் இருந்து பணத்தை திருடுவதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் காணாமல் போவதாக பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் வந்ததை அடுத்து, இந்த கும்பலை கைது செய்ய அவர்கள் ஒரு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டதாக சி.ஐ.டி தெரிவித்துள்ளது.

கும்பலின் ஏனை உறுப்பினர்களை கைது செய்யவும், மோசடி தொடர்பான முழுமையான தகவல்களை பெறவும் சிஐடியினர் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.