நாட்டில் தனிமைப்படுத்தல் பகுதிகள் குறித்த அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளில் நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கவிக்கப்படுவதுடன் சில பகுதிகள் முடக்கப்படவுள்ளன.

இதன்படி, வாழைத்தோட்டம் பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை ஐந்து மணிமுதல் தனிமைப்படுத்தபடவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டாம் வீதி, வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பொலிஸ் பிரிவு பகுதிகள் நாளை காலை ஐநது மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

அத்துடன், கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேகந்த மற்றும் ஹூனுப்பிட்டிய கிராமசேகவர் பிரிவுகளும் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளன.

அதேபோல், வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயூரா பகுதி, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த, காளிபுள்ளவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சந்த செவன பகுதிகளும் நாளை காலை ஐந்து மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.