சித்ராவின் நினைவாக இருந்த அந்த ஒன்றையும் மாற்றிய சீரியல் குழு.. செம்ம அப்செட்டில் ரசிகர்கள்

சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. சித்ரா மிகவும் தைரியமானவர் அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியல் இல்லை என சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கூறி வருவதால், சித்ராவின் தற்கொலை மர்ம மரணமாக பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, சித்ராவின் தற்கொலையை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதிலாக காவியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவரோடு சேர்த்து சித்ராவின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து வந்த டப்பிங் ஆர்டிஸ்ட்டையும் சீரியல் குழு மாற்றியுள்ளது.

இதனால், முல்லை ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். சித்ராவின் நினைவாக இருந்தது அந்த ஒரு குரல் மட்டும் தான் இப்போது அதையும் மாற்றி விட்டீர்களே என சீரியல் குழுவை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.