ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டம் தொடர்பில் விசேட கூட்டம்

ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார முன்னேற்பாட்டு கூட்டம் எதிர்காலத்தை பலப்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் இன்று யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெறவுள்ள பிரச்சாரக் கூட்டங்களின் முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் முன்னாள் கல்வி,இராஜாங்க மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சரும், வடமாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இன்று இடம் பெற்றது.

நாடு தகுதியான தலைவரை தெரிவு செய்யும் மிக முக்கியமான தருணத்தில் வந்து நிற்கிறது, இந்நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உறுதியான தலைமையின் கீழ் தேர்தலில் மக்களை ஒன்று திரட்டுவதற்காக பல பிரச்சாரக் கூட்டங்கள் நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டங்கள் சாதாரணமான கூட்டங்களாகவல்ல, நாட்டு மக்களின் நம்பிக்கைகளை எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கின்ற வகையில் அமைய வுள்ளன.

எனவே நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்தவுள்ள ஜனாதிபதி அவர்கள் பங்கேற்கும் பிரச்சார கூட்டங்களில் பாதுகாப்பினை பலப்படுத்துவது இன்றியமையாதது.

இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாக்கவல்ல தகுதியான தலைவரை தெரிவுசெய்யும் தேர்தலில் மக்களை சரியான வழியில் நெறிப்படுத்துவதற்காக பல பிரச்சார கூட்டங்கள் நாடுபூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வடபுலத்தில் இடம்பெறவுள்ள பிரச்சாரக் கூட்டங்கள்தடையேதும் இல்லாமல் நடைபெறுவதற்கான அனைத்துநடவடிக்கைகளும் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் “வளமும் அமைதியுமான இலங்கை” என்ற தொனிப்பொருள் யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் ஓங்கிஒலிக்க வேண்டும்,

வலுவான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கிட அனைவரும் ஒன்றினைவோம்.

எங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க ரணில் விக்கிரமசிங்கவின் கரத்தை பலப்படுத்துவோம்.