ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து யாழில் பிரசார கூட்டமொன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் பிரசார கூட்டமொன்று சுண்ணாகம் பகுதியில் இன்றையதினம் நடைபெற்றது.

மானிப்பாய் தேர்தல் தொகுதிக்குட்பட்ட சுண்ணாகம் மயிலங்காடு சிறிமுருகன் விளையாட்டு கழக மைதானத்தில் இன்று (27) மாலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

பிரசார கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதிநிதிகள், இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.