கேரவனில் அந்த வேலையை மட்டும் செய்யவேமாட்டார் ரஜினிகாந்த்..

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக கூலி படத்தில் நடித்துவருகிறார். இந்த வயதிலும் படு சுறுசுறுப்பாக இருக்கும் அவரைப் பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். அதுமட்டுமின்றி ஈகோ பார்க்காமல் பலரை மனம் திறந்து பாராட்டுவதையும் அவரது நல்ல குணமாக பார்த்துவருகிறார்கள். இந்தச் சூழலில் தயாரிப்பாளர் கே.ராஜன் ரஜினிகாந்த் குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ரஜினிகாந்த் அனைவரையும் காந்தம் போலம் ஈர்த்து வைத்திருக்கிறவர். இப்போது நடிக்கும் பல நடிகர்கள் ரஜினிகாந்த்தை பார்த்து சினிமாவுக்குள் வந்தவர்கள். அந்த அளவுக்கு அவரது தாக்கம் இருக்கிறது. இப்போதும் இள ஹீரோக்களுக்கு செம டஃப் கொடுத்துக்கொண்டிருக்கும் ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார்.

ராஜன் பேட்டி: இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரஜினி குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்தார் என்றால் அது மிஸ் ஆகவே ஆகாது. அந்தப் படம் முடியும்வரை வேறு படத்தில் நடிக்கமாட்டார். அதனால்தான் அவரால் இப்போதும் வெற்றிநடை போட முடிகிறது. ஷூட்டிங் 8 மணிக்கு என்றால் 7.30 மணிக்கு மேக்கப்போடு ரெடியாக இருப்பார். ஐந்து நிமிடங்களைக்கூட வீணாக்கமாட்டார்.

சுத்தமாக இருக்காது: கேரவனில் அமர்ந்துகொண்டு சீட்டு விளையாடுவது, யாரிடமோ ஃபோனில் பேசிக்கொண்டிருப்பது என அந்த மாதிரியான வேலைகள் எல்லாம் அவரிடம் சுத்தமாக இருக்கவே இருக்காது. அவர் வந்தார் என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இருப்பார். வேலையில் மட்டும்தான் அவரது முழு கவனமும் இருக்கும். சத்யா மூவிஸ் அவரை வைத்து தங்கமகன் திரைப்படத்தை தயாரித்தது. அப்போது அவருக்கு உடல்நிலை திடீரென சரியில்லாமல் போய்விட்டது.